ஆதிக்கசாதியினரால் தொடர்ந்து தாக்கப்படுவதாக பலமுறை அளிக்கப்பட்ட மனுக்களை முக்காடாக போட்டு ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் தொடர்ந்து அதிக்கசாதியினரால் தாக்கப்படுவதாகவும், காவல்துறையும் இதற்கு உடந்தையாக செயல்படுவதாகவும் கூறி ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட அமைப்புச் செயலாளர் தாமரை வீரன், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



இதுகுறித்து, அவர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், கிணத்துக்கடவிற்கு உட்பட்ட தாமரைக்குளம், ரொட்டிக்கடை பகுதியில் நானும், எனது தம்பி முருகன் ஆகிய இருவரும் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். நாங்கள் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நான் கோவை மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட அமைப்புச் செயலாளராக பணியாற்றி வருகிறேன். மேலும், சுயமாக தொழில் துவங்கி நடத்தி வருகின்றேன்.

நாங்கள் வசிக்கும் பகுதியில் ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த 7 குடும்பத்தினர் ஒன்றிணைந்து எங்களை எப்படியும் அப்பகுதியில் இருந்து வெளியேற்ற நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பல்வேறு புகார்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், கடந்த 7.3.2017 அன்று எனது மனைவி மீது அப்பகுதி ஆதிக்கசாதியினர் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த எனது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து புகார் மனுவை கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அளித்தபோது காவல்துறையினர் எங்கள் மீதே வழக்கை பதிவு செய்து மிரட்டியதால் அதுகுறித்தான புகாரினை கோவை மண்டல ஐஜி-யிடம் வழங்கியுள்ளேன்.

இச்சம்பவங்களுக்கு பின்புலமாக இருந்து செயல்படுபவர் கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் பணியாற்றி, தற்போது ஆனைமலை காவல்நிலையத்திற்கு பணியிடமாற்றம் பெற்றுள்ள சார்பு ஆய்வாளர் செல்வநாயகம். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே எங்களது குடும்பத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் எங்களையே வஞ்சித்து வருகின்றனர். எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தக்க தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அம்மனுக்களை இணைத்து தலையில் முக்காடாக போட்டு மாவட்ட ஆட்சியரிடம் தாமரை வீரன் மனு அளித்தது சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...