நியாய விலைக்கடையை முற்றுகையிட்ட தி.மு.க எம்.எல்.ஏ. கைது


நியாய விலைக்கடைகளில் மலிவு விலைப்பொருட்கள் முறையாக வழங்க கோரி தி.மு.க  சிங்காநல்லூர் சட்டம்ன்ற தொகுதி எம்.எல்.ஏ. நா.கார்த்திக் இன்று கோவை மசக்காளி பாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையை முற்றுகையிட்டார். அவருடன் 50க்கும் மேற்பட்ட தி.மு.க  உறுப்பினர்கள் கலந்து கொண்டு, நியாய விலைக்கடைகளில் முறையாக பொருட்களை வழங்க  கோரி கோஷமிட்டனர்.

 

தொடர்ந்து, எம்.எல்.ஏ. நா.கார்த்திக்  செய்தியாளர்களிடம் பேசியதாவது :- 

எங்கள் கட்சியின் செயற்தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அனைத்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்கள் தொகுதிக்குட்பட்ட நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி மக்களுக்கு முறையாக பொருட்களை வழங்காத நியாய விலைக்கடைகளை முற்றுகையிடும் போராட்ட்ம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சி மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 



தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க வினர் மற்றும் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...