வால்பாறை அரசு மருத்துவமனை அருகே சிறுத்தை நடமாட்டம் - மக்கள் அச்சம்!

வால்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்றிரவு 9 மணியளவில் உலா வந்த சிறுத்தையால், பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: வால்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதில் சிறுத்தை, காட்டு யானை, கரடி, காட்டுப்பன்றி, போன்றவை குடியிருப்பு பகுதியில் சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வால்பாறை அரசு மருத்துவமனை அருகே இரவு 9 மணி அளவில் மருத்துவமனை வளாக பகுதியில் சிறுத்தை ஒன்று சென்றுள்ளது. இது, அருகில் இருந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது,

சுமார் ஒன்பது மணி அளவில் மருத்துவமனையில் இருந்து செவிலியர், மருத்துவர் வரும் பொழுதும், இரண்டு சக்கர வாகனம் வரும் பொழுதும் சிறுத்தை நடமாடியது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் சிறுத்தையை உடனடியாக வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...