ரூபெல்லா தடுப்பூசியால் பள்ளி மாணவருக்கு மூளை காய்ச்சல் ? கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

கோவையில் தட்டம்மை தடுப்பு மருந்தான ரூபெல்லா தடுப்பூசி போட்டப்பட்ட நிலையில் பள்ளி மாணவர் ஒருவர் மூளை காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நீலிக்கோணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவரது மகன் கோகுல் அப்பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.  கடந்த மாதம் அப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் தட்டம்மை தடுப்பு மருந்தான ரூபெல்லா தடுப்பூசி மாணவர்களுக்கு போடப்பட்ட நிலையில் மாணவன் கோகுலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.  மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு ஒரு மாதத்திற்கு பிறகும் குணமாகாமல் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மாணவன் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கோகுல்-ன் பெற்றோர் கோவை அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதித்ததில் மாணவனுக்கு மூளைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் மாணவனின் உடல்நிலை அவ்வப்போது குணமாவதும் திடீரென அவன் மனநிலை பாதிக்கப்பட்டது போல் காணப்படுவதும் அவரது பெற்றோரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.  ரூபெல்லா தடுப்பு மருந்து 15 வயதுக்குட்பட்டோருக்கு கட்டாயம் என்ற அடிப்படையில் அரசு வழங்கி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் இதேபோன்று குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாவது தொடர்கதையாகி வருவது பெற்றோர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...