பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு கோவையில் மட்டும் 12.65 லட்சம் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்க இலக்கு நிர்ணியிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



கோவை: அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 24ஆம் தேதி மாத்திரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்றைய தினம் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் அனைத்து இடங்களிலும் நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு, வரும், 24 ம் தேதி மருந்து வழங்கப்படும். 1 வயது முதல், 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 20 – 30 வரையிலான பெண்களுக்கு, குடல்புழு நீக்க மருந்து(அல்பெண்டசோல்) வழங்கப்படுகிறது.



கோவை மாவட்ட சுகாதார துறை சார்பில், கோவை, மாவட்டத்தில் உள்ள அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுக்குப் பின் குடற்புழு நீக்க மருந்து மாத்திரை வழங்கப்படுகிறது.

கோவை மாவட்ட சுகாதார பணி அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள, 985 தனியார், 1,070 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 1,697 அங்கன்வாடி மையங்கள், 150 கல்லுாரிகள், 89 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 328 துணை சுகாதார நிலையங்கள் மூலம் மாத்திரை முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு வரும், 24 ம் தேதி வழங்கப்படும். மாவட்டத்தில், 12.65 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு மாத்திரை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...