மாணவர்களுக்கு காமராஜரைப் போல முன்மாதிரிகள் இப்பொழுது இல்லாதது வருத்தமளிக்கிறது -மரபின் மைந்தன் முத்தையா பேச்சு

கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் "கல்லூரி ஆண்டு விழா மற்றும் தமிழ்மன்றம் நிறைவு விழா" இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவிழாவில் சிறப்பு விருந்தினராக பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையா கலந்து கொண்டு சிறப்புரையற்றினார். 



அவர் பேசுகையில்; மாணவ- மாணவிகள் அமைதியாக இருந்தால் பல அர்த்தங்கள் உள்ளன. அமைதியான மாணவர்கள் ஆழமான சிந்தனை கொண்டவர்கள். கல்லூரி காலங்களில் மாணவர்கள் திறன்களை வளர்க்க வேண்டும். அதேபோன்றே இவர்களின் திறன்களை நிர்வாகமும் அங்கீகரிக்க வேண்டும். மாணவர்களின் படைப்புகளையும், திறன்களையும் பல சாதனைகளை கௌரவம் செய்யும் விழாதான் கல்லூரிகளின் ஆண்டு விழாக்கள். கலை மற்றும் அறிவியல் துறைகளில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர். 

அரசு வேலைகளில் மற்றும் அரசியலிலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படித்தவர்கள் இன்று பல உயரிய பதவிகளையும், பொறுப்புகளையும் பெற்று சிறந்து விளங்குகின்றனர். இவர்களுக்கு அரசியலில் காமராஜரைப் போல முன்மாதிரிகள் இப்பொழுது இல்லாதது மிகவும் வருதமளிகிறது. தற்போதைய அரசியலில் உயர்ந்த முன்மாதிரிகள் யாரும் இல்லாததால் தவறான வழிக்கு இன்றைய இளைஞர்கள் கொண்டு செல்கின்றனர். நாம் என்ன படிக்கிறோம் என்பதை விட படிப்பினால் எவ்வளவு உயரத்தினை தொடுகிறோம் என்பதே முக்கியம். தோல்விகள், அவமானங்கள், துயரங்கள் மற்றும் கவலைகளை தோலில் சுமந்து கொண்டே இருக்காதீர்கள். இவைகளை தூக்கி எறியுங்கள் எப்பொழுதும் நிபந்தனை இல்லாத நட்பினை வளர்க்க வேண்டும் என்றார்.





இவ்விழாவில், தமிழ்மன்றத்தின் தூரிகை இதழ் சிறப்பு விருந்தினரால் வெளியிடப்பட்டது. மேலும் இவ்வருடத்தின் சிறந்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கி கௌரவம் செய்யப்பட்டது. இதில், கல்விக்குழுமங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன், கல்லூரி முதல்வர் பாபாஞானக்குமார், துணை முதல்வர் விஜயசாமுண்டேஷ்வரி, தேர்வு கண்காணிப்பாளர் சுனிதா, பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....