உடுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.50 லட்சம் முறைகேடு - விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

உடுமலை அடுத்த விருகல்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் கடன் பெற்று திருப்பி செலுத்திய பிறகும் வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல், ரசீது கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: உடுமலை அடுத்த விருகல்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் 50 லட்சத்திற்கும் மேல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



உடுமலை அடுத்த விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் கடன் பெற்று திருப்பி செலுத்திய பிறகும் வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல் முறையாக ரசீது கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே விவசாயிகள் பெற்ற பயிர் கடனில் 50 லட்சம் வரை முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது.



இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரணை நடைபெற்று முடிந்த பிறகும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய பயின் கடன் ரசீது வழங்காமலும் மறுகடன் வழங்காதையை கண்டித்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது,

கடந்த எட்டு மாத காலமாக விவசாயிகள் பயிர் கடன் பெற்று செலுத்திய பிறகும் அவரது வங்கி கணக்கில் வர வைக்காமல் சுமார் 50 லட்சத்திற்கு மேல் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்கடன் ரசிது வழங்க வேண்டும். மேலும் மறு கடன் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்



உடுமலை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...