கோவை வடக்கு, மேற்கு மண்டலத்தில் பல்வேறு பணிகள் குறித்து மேயர் கல்பனா ஆய்வு!

கோவை மேற்கு மண்டலத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் தூய்மை பணியாளர்களுக்கான உபகரணங்களை வழங்கிய மேயர் கல்பனா ஆனந்தகுமார், வடக்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சியில் வடக்கு, மேற்கு மண்டலங்களில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.34க்கு உட்பட்ட சிவாஜி காலனியில்‌ வானவில்‌ பொது அறக்கட்டளை சார்பில்‌ ரூ.1லட்சம்‌ மதிப்பீட்டில்‌ குப்பைகள்‌ சேகரிக்கும்‌ 5 தள்ளுவண்டிகள்‌, அதற்கான புதிய குப்பைத்‌ தொட்டிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ சுகாதார தூய்மை பணியாளார்களுக்கு வழங்கினார்‌.



கோவை வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்குட்பட்ட பாரதியார்‌ ரோடு, எம்‌.கே.பி.காலனி பகுதியில்‌ மழைநீர்‌ வடிகால்‌ தூர்வாரும்‌ பணி நடைபெற்று வருவதை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அப்பகுதியில்‌ புதிதாக மழைநீர்‌ வடிகால்‌ அமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயார்‌ செய்ய சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்‌.



இதேபோல், கோவை மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.34க்குட்பட்ட சிவாஜி காலனியில்‌ ரூ.28 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, பணியினை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...