தலையில் கல்லைப்போட்டு பெயிண்டர் கொலை - குடிக்க பணம் தராததால் ஆத்திரம்…!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பிரிவு பகுதியில் தலையில் கல்லைப் போட்டு மாரிதுரை என்ற பெயிண்டர் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிக்க பணம் கொடுக்காத ஆத்திரத்தில் பெயிண்டரை சக்திவேல் என்ற இளைஞர் கொலை செய்தார்.


கோவை: குடிக்க பணம் தர மறுத்த பெயிண்டரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சக்திவேல் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாரிதுரை மற்றும் சக்திவேல். கோவையில் வசித்து வரும் 50 வயதான மாரிதுரையும் 19 வயதான சக்திவேலும் ஒரே ஊர் என்பதால் இருவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இருவருக்குமே குடிப்பழக்கமும் இருந்துள்ளது. இதில் பெயிண்ட்டராக உள்ள மாரிதுரை சாலை ஓரம் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வீரபாண்டி பிரிவு பகுதியில் குடிபோதையில் வந்த சக்திவேல் ஏற்கனவே போதையில் இருந்த மாரிதுரையிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். மாரிதுரை தர மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் அருகில் கிடந்த கல்லை எடுத்து மாரிதுரையின் தலை மற்றும் முகத்தில் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மாரிதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மாரிதுரையை கொலை செய்த சக்திவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...