நடிகர் சத்யராஜின் தாயார் உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு, எம்.பி ஆ.ராசா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்

நடிகர் சத்யராஜின் தாய் நாதாம்பாள் நேற்று மாலை உயிரிழந்த நிலையில் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள சத்யராஜின் இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.



கோவை: நடிகர் சத்யராஜ் தாயார் உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் நேற்று மாலை உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள சத்யராஜின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நாளை காலை உடல் ஆவாரம்பாளையம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ள சூழலில் இன்று காலை அவரது உடலுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



அதைத்தொடர்ந்து நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா மற்றும் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா திமுக தலைமை சார்பிலும் முதலமைச்சர் சார்பிலும் சத்யராஜ் தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்ததாக தெரிவித்தார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...