"பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை உயர்த்த விரும்பாதவர் ஜெயலலிதா" -முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன்


தமிழகத்தில் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி விதிப்பை கடைசி வரை விரும்பாதவர் ஜெயலலிதா எனவும், தற்போதைய பினாமி அரசு வரியை உயர்த்திருப்பது தவறான கொள்கை முடிவு என முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக நாளை காலை 11 மணக்கு ஓ.பி.எஸ் அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும், தங்கள் அணிக்கு வெற்றி வாய்பிருப்பதாகவும் தெரிவித்தார். சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் நிலையில், சட்டமன்றத்தில் மறைமுக வாக்கெடுப்பிற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதி மக்களின் மனநிலையை உணர்ந்திருக்கும் நிலையில் தமிழகத்தில் மாற்றங்கள் நிகழும் என்றார். 

பொதுச்செயலாளர் தேர்தல் நீதிமன்ற உத்திரவு படியோ தேர்தல் ஆணைய உத்திரவுபடியோ நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், வெகுவிரைவில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்வு அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் வாக்குகள் கேட்கப்பட்டு நடத்தப்பட வேண்டும் என்பதே தங்களின் ஆவல் எனவும் தெரிவித்தார். இரட்டை இலை சின்னம் கண்டிப்பாக தங்களுக்கு ஜெயலலிதா ஆன்மாவின் ஆசியுடன் கிடைக்கும் என நம்புவதாக கூறிய அவர், கல்வி துறையின் செயல்பாடுகள் ஜெயலலிதா விரும்பிய படி இருக்க வேண்டும் எனவும் பல சவால்கள் கல்வித்துறை முன்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...