ஈஷா யோக மையத்தின் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

ஈஷா யோக மையத்தின் ஆக்கிரமிப்பு பகுதிகளை  அகற்ற கோரியும், மலைவாழ் மக்களுக்காக போராட்டியவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை கண்டித்தும் தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் கட்சி மற்றும் சமூக நீதிக்கட்சியினர் கோவை தெற்கு தாலுக்கா அலுவலலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொது செயலாளர் சிவஞானம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-



சட்டத்திற்கு புறம்பாக ஈஷா கட்டிடங்களை கட்டியதை உயர் நீதிமன்றமே உறுதி செய்து விட்ட நிலையில் இன்னும் அந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக ஈஷா ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஈஷா ஆக்கிரமித்த மலைவாழ் மக்களுக்கு சொந்தமான 44 ஏக்கர் உபரி நிலத்தை மீட்க எங்கள் கட்சியை சேர்ந்த தலைவர்கள் போராட்டங்கள் நடத்தினர். தற்போது அவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டுள்ளது.இந்த செயலை கண்டித்து இன்று மாவட்டங்கள் முழுவதும் எங்கள் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இன்று கல்லூரி மாணவர் ஒருவர் ஈஷா வளாகத்தில் உள்ள சூர்ய குண்டத்தில் குளித்ததால் மரணமடைந்துள்ளார். இது குறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஈஷா மற்றும் காருண்யா நிறுவனங்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...