புஷ்பா பட பாணியில் சந்தன மரம் கடத்தல் - விரட்டி சென்று லாரியை பிடித்த அதிகாரிகள்!

கேரளாவில் இருந்து தமிழ்நாடு வழியாக ஆந்திராவுக்கு புஷ்பா பட பாணியில் சந்தன மரங்களை கடத்தி சென்ற கர்நாடகா பதிவெண் கொண்ட லாரியை, தமிழக போலீசார் விரட்டிச் சென்று மடக்கி பிடித்து, ஒரு கோடி மதிப்பிலான ஒரு டன் சந்தன மரங்களை பறிமுதல் செய்தனர்.



கோவை: புஷ்பா பட பாணியில் சந்தன மரங்களை கடத்திச் சென்ற லாரியை போலீசார் மடக்கி பிடித்து ஒரு டன் சந்தன மரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். கோவையில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படுவதனால் அதற்காக தனிப்படை போலீசாரும் சந்தன கடத்தல் கும்பலை பிடிக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளா மாநிலம் மலப்புரத்தில் இருந்து வந்த லாரியை தணிக்கை செய்ய முற்பட்டபோது லாரி நிற்காமல் சென்றுள்ளது. இதை தொடர்ந்து அந்த லாரியை பின் தொடர்ந்து விரட்டிச் சென்று பிடிக்க திட்டமிட்டனர். அதற்குள் லாரி வெகு தூரம் பயணித்தது.

பிறகு போலிசார் மடக்கிப் பிடிக்க திட்டமிட்டனர். லாரியின் ரிஜிஸ்ட்ரேசன் எண் தெரியாத நிலையில், வாகனத்தின் அடையாளத்தை நினைவில் வைத்து விரட்டி சென்று ஆத்தூரில் பிடித்தனர். லாரி ஓட்டுநர் மனோஜிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.



விசாரணையில் தூக்க கலக்கத்தில் இருந்ததால் நீங்கள் லாரியை நிறுத்தியது தெரியவில்லை என்றும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். அந்த லாரியில் மரத்தூள் கட்டைகள் இருப்பதாக கூறி உள்ளார்.

சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அந்த லாரியில் சோதனை செய்தனர்.



அதில் ரகசிய அறை அமைத்து சந்தன கட்டைகள் மறைத்து வைத்து கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து வனத் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.



அங்கு வந்து லாரியை பறிமுதல் செய்த வனத்துறையினர், வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் கொண்டு சென்று சோதனை செய்ததில், ஒரு டன் சந்தன மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.



50க்கும் மேற்பட்ட மூட்டைகளில் 1051 கிலோ சந்தன மரங்கள் பதுக்கப்பட்டிருந்தது. இதன் சந்தை மதிப்பு ஒரு கோடி என்று தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...