கோவையில் வரும் 5ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவையில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது தொடர்பாக அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.



கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வருகிற ஐந்தாம் தேதி கோவை துடியலூர் பகுதியில் உள்ள கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 250 க்கு மேற்பட்ட வேலை அளிக்கும் நிறுவனங்களின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது இதில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.



இது சம்பந்தமாக கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை செயலாளர் வீரராகவன், மாவட்ட ஆட்சித் தலைவர் கிரந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், மற்றும் மாநகராட்சி மண்டல தலைவர்கள் மீனா லோகு, இளஞ்செல்வி கார்த்திக், மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...