இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!

வீரபாண்டி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கரைப்புதூர் நடராஜனின் ஓட்டுனர் எனக்கூறி இலவச வீட்டு மனை பட்டா பெற்று தருவதாக கூறி சுமார் 14 லட்சம் வரை மோசடி செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.



திருப்பூர்: இலவச வீட்டுமனை பட்டா பெற்று தருவதாக கூறி 14 லட்சம் வரை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வாங்கித் தருவது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இவரிடம் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வீரபாண்டி பகுதி சேர்ந்த சங்கர் என்பவர், தான் பல்லடம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜனிடம் ஓட்டுனராக வேலை செய்வதாகவும் தனக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளை நன்கு தெரியும் என கூறியுள்ளார்.

இலவச வீட்டு மனை பட்டா வாங்கித் தருவதற்கு நபர் ஒன்றுக்கு 30,000 கொடுத்தால் உடனடியாக வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக சுண்ட மேடு பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தெரிவித்த போது, சுமார் 75க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஐந்தாயிரம், பத்தாயிரம் என சிறுக சிறுக பணத்தை கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

இவ்வாறு கடந்த ஆறு மாதத்தில் சுமார் 14 லட்சம் ரூபாய் வசூல் செய்து சங்கரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் சங்கர் பணம் கொடுத்த மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் உரிய பதில் கிடைக்கவில்லை.



இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக கூறி 14 லட்சம் வரை ஏமாற்றிய சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...