கோவையில் பா.ஜ.க சார்பில் 'தாமரையின் தாகம் தீர்க்கும் யாத்திரை' விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம்

கோவையில் பா.ஜ.க சார்பில் தாமரையின் தாகம் தீர்க்கும் யாத்திரை என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் இன்று துவங்கியது.



கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இந்த பிரச்சார பயணமானது துவங்கியது. பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெறும் இந்த பிரச்சார பயணமானது இன்று துவங்கி வரும் 14ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற இருக்கின்றது.

இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நீர் நிலைகள் பாதுகாப்பு குறித்தும் நீர் நிலைகள் தூர்வாறுவதன் அவசியம் குறித்தும் இந்த பிரச்சார பயணத்தின் போது பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. இந்த விழிப்புணர்வு பயணத்தின் முன்பாக வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் மரம் நடப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இந்த யாத்திரை துவங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகள் தூர்வாரப்பட வேண்டும். மாநில அரசு நீர் நிலைகளை தூர்வார தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மத்திய அரசிடம் தேவையான உதவிகளை பெற்றுத் தர தமிழக பா.ஜ.க உறுதுணையாக இருக்கும்" என தெரிவித்தார்.

இதனைத் தொடந்து பேசிய வானதி சீனிவாசன், கோவை மாவட்டத்தில் 5 நாட்கள் நடைபெறும் இந்த பிரச்சார பயணத்தின் போது நீர் நிலைகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருப்பதாகவும், விழிப்புணர்வு பயணத்தின் போதே 10 லட்சம் மக்களிடம் கையெழுத்து பெற்று அதை தமிழக முதலமைச்சரிடம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், பிரச்சார பயணத்தின் போது ஆங்காங்கே மரங்களும் நடுவதுடன், குளம், குட்டைகளை தூர்வாறும் பணிகளிலும் ஈடுபட இருப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

இந்த பிரச்சார துவக்க விழா நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே வாகன அனுமதியின்றி ஊர்வலமாக செல்ல முயன்ற பாஜக-வினரின் வாகனங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...