கோவை அருகே மொபைல் டாய்லெட் நிறுவனத்தில் தீ விபத்து - ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதம்!

கவுண்டம்பாளையம் அடுத்துள்ள உருமாண்டம்பாளையம் பகுதியில் செய்ல்பட்டு வரும் மொபைல் டாய்லெட் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில், சுமார் 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமாகின.



கோவை: கவுண்டம்பாளையம் அருகே மொபைல் டாய்லெட் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், சுமார் 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் அடுத்துள்ள உருமாண்டம்பாளையம் பொன்விழா நகர் அருகே சேன்டிஸ் என்ற மொபைல் டாய்லெட் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் ராஜேஷ்குமார், ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் முக்கிய விழாக்களில் மொபைல் டாய்லெட்களை வாடகைக்கு விட்டு வருகின்றார். மேலும் விற்பனையும் செய்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்திற்கு அருகிலேயே கோவை – மேட்டுப்பாளையம் செல்லும் ரயில்வே பாதையும் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை இந்த நிறுவனத்தின் உள்ளே 5 ஊழியர்கள் டாய்லெட் பாக்சில் உள்ள பொருட்களை பிரித்து கொண்டு இருந்தனர்.



அப்பொது திடீரென தீ பிடித்துள்ளது. உடனடியாக அவர்கள் வெளியே ஓடியுள்ளனர்.

அதற்குள் தீயானது மளமளவென அங்கிருந்த மொபைல் டாய்லெட்களில் முழுவதுமாக பரவியுள்ளது.



இந்த தீ விபத்தின் காரணமாக அந்தபகுதி முழுவதும் கரும்புகை பரவியது.



இந்த கரும்புகை பரவியது சுமார் 2 கிலோ மீட்டர் வரை பார்க்க முடிந்தது.



இதுகுறித்து அந்தபகுதி மக்கள் உடனடியாக கவுண்டம்பாளையத்தில் உள்ள கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.



தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்த தீவிபத்தின் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர்சேசம் ஏதுவும் ஏற்படவில்லை.



அதற்குள் தீ கம்பெனி முழுவதும் பரவி அங்கிருந்த ஆபிஸ் ரூம்கள் மற்றும் அனைத்து மொபைல் டாய்லெட்டுகளையும் எரித்து சேதமானது.



எரிந்த மொபைல் டாய்லெட்டிகளின் மதிப்பு சுமார் 7 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...