கோவை ‘இதயங்கள்’ அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது - சுகாதாரத்துறை அமைச்சர் வழங்கினார்!

தமிழ்நாடு முழுவதும் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 1,200 ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் கோவையை சேர்ந்த இதயங்கள் அறக்கட்டளைக்கு சிறந்த மருத்துவ சேவையை பாராட்டி, சுகாதாரத்துறை சார்பில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது வழங்கப்பட்டுள்ளது.



கோவை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது கோவையில் மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தலைமையில் செயல்படும் 'இதயங்கள் அறக்கட்டளைக்கு' வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் 2023-ம் ஆண்டு சிறந்த மருத்துவ சேவைக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் ஜூலை 27ஆம் தேதி நடைபெற்றது.

தமிழகத்தில் சிறந்த மருத்துவ சேவைக்காக கோவையில் செயல்படும் இதயங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதனுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் விருது வழங்கி பாராட்டினார்.

மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தலைமையின் கீழ் செயல்படும் இதயங்கள் அறக்கட்டளை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1,200 ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு உயர்தர இன்சுலின், சர்க்கரை பார்க்கும் குளுக்கோமீட்டர் சாதனம், இன்சுலின் பம்ப், வலி குறைவான 4 எம்எம் ஊசி, குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை உள்ளிட்ட பல உதவிகள் கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறியதாவது, கோவையில் தொடங்கிய இதயங்களின் பணி இன்று சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பல அரசு மருத்துவமனைகள் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்துடன் (தமிழ்நாடு பிரிவு) இணைந்து ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்பட காரணமாக செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள விருது இதயங்கள் அறக்கட்டளையின் முக்கிய நோக்கமான "தமிழகத்தில் முதல் வகை சர்க்கரை குறைபாடு கொண்ட ஒரு குழந்தை கூட தரமான மருத்துவமின்றி இன்னல் படக்கூடாது" என்ற உயர் எண்ணத்திற்கு ஒரு ஊன்று கோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

முதல் வகை சர்க்கரை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களை சேர்ந்த 20 வயதுக்குட்பட்டவர்கள் உதவி பெற, இதயங்கள் அறக்கட்டளையை 9042858882 என்ற எண்ணிலும், இதயங்களின் வலைத்தளம் www.idhayangal.org -லும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தெரிவித்தார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...