மடத்துக்குளத்தில் நெருப்பில்லா சமையல் போட்டி - உற்சாகத்துடன் பங்கேற்ற மாணவர்கள்!

மடத்துக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் போஷன் அபியான் திட்டத்தின் மூலம் நடைபெற்ற நெருப்பில்லா சமையல் போட்டியில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்றனர்.


திருப்பூர்: மடத்துக்குளம் பகுதியில் நடைபெற்ற அடுப்பில்லா சமையல் போட்டியில் 60க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் போஷன் அபியான் திட்டத்தின் மூலமாக வளர் இளம்பருவத்தினர்கான நெருப்பில்லா சமையல் போட்டி மடத்துகுளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மடத்துக்குளம் வட்டாரத்தில் உள்ள 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் 60-க்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளை கொடுக்கப்பட்ட 25 நிமிடங்களில் செய்து காட்டினர்.

இந்நிகழ்வை மடத்துக்குளம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி.வேளாங்கண்ணி தலைமை தாங்கி நடத்தினார்.



எண்ணம்போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் நெல்சன் போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு மரக்கன்று மற்றும் எழுதுபொருட்கள் பெட்டகங்களை பரிசாக வழங்கினார்.



பள்ளி துணை தலைமையாசிரியர் ஜெயசந்திரன் சிறப்புரை வழங்கினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் கௌதமன் செய்திருந்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...