ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும் - விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

ரேஷன் கடைகளில் பாமாயிலை தடை செய்து தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும். கள்ளுக்கு உண்டான தடையை நீக்குவது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தேங்காயை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ரேஷன் கடைகளில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கிட வேண்டும். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை போல் தமிழகத்தில் கள்ளுக்கு உண்டான தடையை நீக்க வேண்டும். தேங்காய் ஏற்றுமதியில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும்.

உரித்த பச்சை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 50 வீதம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 140 நிர்ணயம் செய்திட வேண்டும்.

தென்னை சார்ந்த உபபொருட்களான நார் தொழில், நார் துகள்கள் போன்ற மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தும் தொழிலுக்கான இடர்பாடுகாளை களைய வேண்டும்.



இவ்வாறான 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் ஏர் முனை இளைஞர் அணி மற்றும் திருப்பூர், கோவை மாவட்ட தென்னை விவசாயிகள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் தேங்காயை சாலையில் உடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.



இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...