அடுத்த அமைச்சரவை கூட்டம் திகார் சிறையில் நடக்க வாய்ப்புள்ளது - முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம்!

செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை, பொன்முடி மீதான விசாரணை, இதன் தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலின் அடுத்து விசாரணைக்கு உள்ளாக்கப்படலாம். திமுகவின் அடுத்த அமைச்சரவை கூட்டம் மத்திய அரசின் திகார் ஜெயிலில் கூட நடக்க வாய்ப்பிருக்கிறது என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.



திருப்பூர்: திமுகவின் அடுத்த அமைச்சரவை கூட்டம் மத்திய அரசின் திகார் ஜெயிலில் கூட நடக்க வாய்ப்பிருக்கிறது என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.



விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டிக்கும் வகையில் திருப்பூர் குமரன் நினைவகம் அருகே ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் காய்கறி விலை உயர்வை சுட்டிக்காட்டும் வகையில் காய்கறி மாலை அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், திமுகவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது, கடந்த திமுக ஆட்சி கரண்ட் கட் பிரச்சினையால் கவிழ்ந்தது. இப்போதைய திமுக ஆட்சி கரண்ட் பில் விவகாரத்தில் கவிழும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை, அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை , இதன் தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலின் அடுத்து விசாரணைக்கு உள்ளாக்கப்படலாம். திமுகவின் அடுத்த அமைச்சரவை கூட்டம் மத்திய அரசின் திகார் ஜெயிலில் கூட நடக்க வாய்ப்பிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எம் எஸ் எம் ஆனந்தன், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...