தாராபுரம் அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலியான சோகம்!

தாராபுரம் அடுத்த பொம்பநல்லூரில் தங்கியுள்ள ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தமாஜி என்பவரது 3 வயது மகன், பக்கத்து வீட்டு செப்டிக் டேங்க் மீது விளையாடிக் கொண்டிருந்த போது அதன் மூடி உடைந்து உள்ளே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகே, விளையாடும் போது கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது வடமாநில சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தமாஜி (36). இவர், தனது குடும்பத்துடன், தாராபுரம் - பழனி சாலையில், பொம்பநல்லூர் பகுதியில் உள்ள (பழனி விஜய்) தனியார் ஸ்பின்னிங் மில்லில் குடியிருப்பில், குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார்.

சந்தமாஜியின் 3 வயது மகன், பக்கத்து வீட்டு சிறுவனுடன் குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த கழிவுநீர் தொட்டியின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, எதிர்பாராத விதமாக கழிவுநீர் தொட்டியின் மூடி உடைந்து, இருவரும் தொட்டிக்குள் விழுந்தனர். அங்கிருந்த தொழிலாளர்கள், இருவரையும் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.



அங்கு, சிறுவர்களை பரிசோதனை மருத்துவர்கள், 3 வயது வடமாநில சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். மற்றொரு சிறுவனுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இச்சம்பவம் குறித்து, அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...