கலைஞர் மகளிர் உரிமை திட்ட தன்னார்வலர்கள் பயிற்சி முகாம் - திருப்பூர் ஆட்சியர் திடீர் ஆய்வு!

திருப்பூரில் மகளிர் உரிமை திட்டத்திற்கான தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயனாளிகளை தேர்வு செய்வதற்கான சிறப்பு பயிற்சி முகாமில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் கிறிஸ்துராஜ் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமை திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாமில், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் அறிவிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் முதல் பெண்களுக்கு கிடைக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பயனாளிகளை தேர்வு செய்வதற்காக இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பங்கு பெற்றுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பிற தன்னார்வலர்கள் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.



அவர்களுக்கான பயிற்சி கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 235 நியாய விலைக் கடைகளின் அருகில் நடைபெற உள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த சிறப்பு முகாமில் தகுதியுடைய குடும்பத் தலைவிகள் மூலம் வழங்கப்படும் விண்ணப்பங்களை பெற்று சரிபார்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது.



இந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...