காய்கறி விலை உயர்வால் வெறிச்சோடி காணப்படும் உக்கடம் காய்கறி மார்க்கெட்!

தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், காய்கறிகள் வாங்க வாடிக்கையாளர்கள் வராததால், எப்போது கூட்டமாக காணப்படும் உக்கடம் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.



கோவை: தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வின் காரணமாக வாடிக்கையாளர்கள் வராததால், உக்கடம் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.



கடந்த சில தினங்களாக பருவமழை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வர வேண்டிய காய்கறிகளின் வரத்து குறைவானதால் பல்வேறு காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.



குறிப்பாக தக்காளி சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது.



அது மட்டுமின்றி இஞ்சி பீன்ஸ் ஆகியவற்றின் விலையும் அதிகரித்து உள்ளதால் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும் உக்கடம் காய்கறி மார்க்கெட் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

தற்போதைய விலை நிலவரத்தின் படி தக்காளி கிலோ 100 ரூபாய், ஆப்பிள் தக்காளி 120, சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய், பூண்டு கிலோ 180 ரூபாய், இஞ்சி கிலோ 260 ரூபாய், கேரட் கிலோ 60, பீட்ரூட் கிலோ 40, கத்தரிக்காய் கிலோ 50, உருளைக்கிழங்கு கிலோ 30, முருங்கைக்காய் கிலோ 50, பெரிய வெங்காயம் கிலோ 25 என விற்பனை செய்யப்படுகிறது.

அன்றாட சமையலுக்கு மிகவும் அத்தியாவசியமான தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி ஆகியவற்றின் விலை அதிகரித்தே காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் காய்கறிகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டாததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.

தக்காளியின் விலை முந்தைய நாட்களை விட குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...