டிஐஜி விஜயகுமார் மரணம் - கோவையில் பேனர் வைத்து அஞ்சலி செலுத்திய இளைஞர்கள்!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கோவை - தடாகம் சாலை திருவள்ளுவர் நகரை சேர்ந்த இளைஞர்கள் டிஐஜி விஜயகுமாருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



கோவை: கோவையில் தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி விஜயகுமாருக்கு இளைஞர்கள் பேனர் வைத்து மலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த 7ம் தேதி அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது.

டிஐஜி விஜயகுமார் இறப்பிற்கு தமிழக முதல்வர் உட்பட பல்வேறு தலைவர், காவல் அதிகாரிகள் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது இந்த தற்கொலை காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலையில் கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் ஊரை சேர்ந்த இளைஞர்கள் டிஐஜி விஜயகுமாருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்வில் நஞ்சுண்டாபுரம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் VKV சுந்தரராஜ், தடாகம் காவல்துறையினர் உட்பட அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.



இளைஞர்களின் இச்செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...