உடுமலை கல்குவாரிகளில் விதி மீறல்கள் குறித்து ஆய்வு செய்ய முடிவு!

திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், உடுமலை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குவாரிகளில் விதிமீறல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள கல்குவாரிகளில் விதி மீறல்கள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், திண்டுக்கல், உடுமலை, மடத்துக்குளம், பழனி தாலுகாவிலுள்ள குவாரிகளிலிருந்து, கேரளாவுக்கு, தினமும், 200 லோடு, ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால், குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பலமடங்கு ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, கனிமங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று முன்தினம், கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு சென்ற, 9 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து, அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், குவாரிகளில் விதிமீறல்கள் குறித்து, திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) சச்சின் ஆனந்த் தலைமையில் உடுமலை தாலுகா அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், அனுமதிக்கப் பட்ட அளவை விட, கூடுதலாக, கனிம வளங்கள் ஏற்றியதாக, 9 லாரிகளுக்கும், ரூ.5.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, கனிம வளத்துறை உதவி இயக்குனர் சச்சின் ஆனந்த் கூறியதாவது,

சட்டவிரோத கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது குறித்து, திண்டுக்கல் மாவட்ட கனிம வளத்துறைக்கு தகவல் கொடுத்து, குவாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக உள்ள கனிம வளங்கள் பறிமுதல் செய்து, உரிய ஆய்வு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...