கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்து : வேகத்தடை அமைத்து தர வலியுறுத்தி தமுமுக சார்பில் திடீர் சாலை மறியல்!

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அண்ணா நகரில் தொடர் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் அப்பகுதியில் வேகத்தடை அமைத்து தர வலியுறுத்தி தமுமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழும் தொடர் விபத்துகளை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைத்து தர வலியுறுத்தி தமுமுக சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வது வழக்கம். இப்பகுதியில் தொடர் விபத்துக்கள் நடப்பதாக அப்பகுதியினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை அண்ணா நகர் பகுதியில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து நிகழ்ந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தந்தை மற்றும் மகள் இருவரும் காயமடைந்தனர்.



இதனைத்தொடர்ந்து அடிக்கடி அப்பகுதியில் விபத்துக்கள் நடப்பதாகவும் அதனை தடுக்க வேகத்தடை அமைத்து தர கோரி பல்லடம் தமுமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...