வால்பாறையில் கனமழை - பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு!

வால்பாறை பகுதியில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான சு.முத்துசாமி, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின், கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை பாதிப்புகள் குறித்து, தமிழக வீட்டு வசதி துறை மற்றும் நகர் புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார்.

வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.



இந்நிலையில், கன மழையால் பாதிப்பு ஏற்படாமலும், பாதிப்பு ஏற்பட்டால் அதை உடனடியாக மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க பேரிடர் மீட்பு படையினர் 106 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், வால்பாறை பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சு. முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, வெள்ள பாதிப்பு பகுதியில் உள்ள மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலை கல்லூரியில் அமைக்கபட்டுள்ள முகாமில் ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் அதிக வெள்ளம் வரும் பகுதியான கூழாங்கள் ஆறு மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள வாழை தோட்ட பகுதியை அமைச்சர் ஆய்வு செய்தார்.



இதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது,



வால்பாறை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை முதலமைச்சர் பார்வையிட அறிவுறுத்தினார். அதன்படி, நான் வால்பாறை பகுதிக்கு வந்து ஆய்வு செய்கிறேன். வால்பாறை பகுதியில் மழையால் பதிப்புகள் இல்லை. பாதிப்புகள் வரும் முன் மாவட்ட நிர்வாகம் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்துள்ளனர்.

அனைத்து துறைகளும், தீயணைப்பு துறை, நெடுஞ்சாலை துறை, மருத்துவ துறை, தயார் நிலையில் உள்ளனர் 106 பேரிடர் படையினர் பேரிடர் கருவிகளை வைத்து தயார் நிலையில் உள்ளனர். 6 இடங்களில் மரம் விழுந்து உடனடியாக சரி செய்யபட்டு உள்ளது.

இரண்டு ஒரு இடத்தில் லேசான மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. அதையும் உடனடியாக சரி செய்யப்பட்டது. 10 இடங்களில் அவசரம் என்றால் மக்களை தங்க வைக்க முகாம் தயார் நிலையில் உள்ளது.

மழையினால் என்ன பிரச்சினை வந்தாலும் அதை உடனடியாக சரி செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் வால்பாறையில் உள்ள அதிகாரிகள் இணைந்து வேலைகளை செய்து உள்ளனர். அதை நான் முதல்வரிடம் தெரிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...