சோமையம்பாளையம் துணை சுகாதார நிலையத்தை மறுசீரமைக்க கோரி அகில பாரத மக்கள் கட்சி மனு!

சோமையம்பாளையம் அடுத்த கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் உள்ள துணை சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்து, பராமரிப்பின்றி சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் இருப்பதால், அதனை சீரமைக்க கோரி அகில பாரத கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சோமையம்பாளையம் அருகேயுள்ள துணை சுகாதார நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி அகில பாரத மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

சோமையம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் உள்ள துணை சுகாதார நிலைய கட்டிடம் போதிய பாதுகாப்பின்றி பழுதடைந்து இடிந்து நிலையில் உள்ளது.

மேலும், அங்குள்ள கழிவு நீர் தொட்டி மற்றும் கழிவறையில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சிகிச்சைக்கு செல்லும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கைகள் எடுத்து அதனை மறுசீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைத்து தர வலியுறுத்தி அகில பாரத மக்கள் கட்சியினர், அக்கட்சியின் நிறுவன தலைவர் ராமநாதன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை அளித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...