கார் நிறுத்துவதில் தகராறு - கணவரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது மனைவி புகார்!

கோவையில் அடுக்குமாடி குடியிருப்பு கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலதிபரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவரின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவையில் அடுக்குமாடி கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலதிபரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை ஜிவி ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி லக்ஷ்மி தேவி இருவரும் குழந்தைகளோடு அப்பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் சொந்தமாக வீடு வாங்கி வசித்து வருகின்றனர்.

அதே குடியிருப்பில் கோவை ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஆய்வாளர் காசிபாண்டியன் என்பவரும் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஆய்வாளர் காசி பாண்டியன் தனது காரை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள “நோ பார்க்கிங்” பகுதியில் நிறுத்தியதாக தெரிகிறது.



இதை பார்த்திபன் தனது செல்போனில் புகைப்படமாக எடுத்து அதை குடியிருப்பு உரிமையாளர்கள் whatsapp குழுவில் பகிர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆய்வாளர் காசி பாண்டியன், பார்த்திபனுக்கு செல்போனில் அழைத்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசி மிரட்டியதாக தெரிகிறது.

இதனிடையே ஆய்வாளர் தனது குடும்பத்துடன் பார்த்திபனின் வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கியதாகவும், இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பார்த்திபன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் பாதிக்கப்பட்ட பார்த்திபனின் மனைவி லட்சுமி தேவி இது குறித்து காவல்துறையில் புகார் எடுக்க மாட்டார்கள் என்பதற்காக, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். அதில், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...