பீளமேடு அருகே மரக்கன்றுகளை நடவு செய்து இயற்கையை பாதுகாக்க உறுதிமொழி ஏற்ற ரயில்வே ஊழியர்கள்!

பீளமேடு அருகேயுள்ள வார்டு எண் 26-ல் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ரயில்வே ஊழியர்கள், இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில், ரயில்வே ஊழியர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



கோவை: பீளமேடு அருகேயுள்ள ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ரயில்வே ஊழியர்கள், இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

கோவை மாநகராட்சி வார்டு எண் 26-ல் பீளமேடு ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஏற்கனவே APJ அப்துல் கலாம் பூங்கா நிர்வாகிகள் சார்பில் 300க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது. 

இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி காலை 7 மணிக்கு ரயில்வே தலைவர் சுவாமிநாதன் தலைமையில் விஜயன் செல்வம், மகேஷ் ராஜராஜன் முன்னிலையில் ரயில்வே ஆய்வாளர் தங்கவேல் பீளமேடு ஸ்டேசன் மாஸ்டர் கோமதி ஆகியோர் பரிந்துரை பேரில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்றது. 



இந்த நிகழ்வில், மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, ஜி 18 ட்ரஸ்ட் பார்த்திபன் யோகராஜ், பீளமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் பூவே கோபால், வழக்கறிஞர் ஆனந்த், பொன்னுசாமி, சண்முகம், நந்தகோபால், சிவதாஸ், சக்திவேல், சந்திரிகா மற்றும் பள்ளி குழந்தைகள், பெரியவர்கள் நகர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு 150க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை நடவு செய்தனர்.

இதனையடுத்து அனைவரும் இயற்கையை பாதுகாக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், குப்பையில்லா நகரத்தை உருவாக்க முயற்சி செய்ய குழு உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...