கோவையில் காவல்துறை சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கோவையில் மாநகர காவல்துறை சார்பில் 'எனக்கு வேண்டாம் நமக்கு வேண்டாம் போதை' என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாமஸ் பூங்காவில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.



கோவை: கோவையில் மாநகர காவல்துறை சார்பில் "எனக்கு வேண்டாம் நமக்கு வேண்டாம் போதை" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 



அதன் தொடர்ச்சியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாமஸ் பூங்காவில், கோவை மாநகர காவல்துறை கோவை மாநகராட்சியுடன் இணைந்து யங் இந்தியா அமைப்பினருடன், போதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டது.



இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரி மாணவர்கள், இணைந்து போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பாடல்கள், நாடகங்கள், ஆர்கெஸ்ட்ரா, மைம் ஷோ போன்றவற்றை அரங்கேற்றினர். #drugfreekovai என்ற தலைப்பில் "எனக்கு வேண்டாம் நமக்கு வேண்டாம் போதை" என்கின்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



முன்னதாக போதைப் ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டு, கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. 



இந்நிகழ்வில் ஐஜி சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், உட்பட காவல் அதிகாரிகள், யங் இந்தியா அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர். 



இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், இதுபோன்ற விழிப்புணர்வு கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட உள்ளது. மேலும் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும்.

முதல் நாள் என்பதால் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. ஒரு சிலரை டிராஃபிக் பூங்காவிற்கு அழைத்துச் சென்று விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இனிவரும் நாட்களில் தொடர்ந்து அறிவுரையுடன் அமலாக்கம் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...