சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் - திருப்பூரில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி!

திருப்பூரில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாநகர காவல்துறையின் சார்பில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாணவர்கள் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.



திருப்பூர்: திருப்பூரில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் சர்வதேச போதைப் பொருள் மற்றும் கடத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கே.எஸ்.சி.அரசு மேல்நிலை பள்ளியில் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்றது.



முன்னதாக மாணவர்கள் மத்தியில் போதை பொருளினால் ஏற்படும் விளைவுகள் குறித்து உறுதி மொழி ஏற்கப்பட்டது. 



தொடர்ந்து பேரணியை மாநகர காவல் ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 



பேரணியில் போதை பொருளால் ஏற்பட கூடிய விளைவுகள் குறித்த பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்தி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். 

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவக்குமார், மாநகர காவல் துணை ஆணையர் வனிதா, உதவி ஆணையர் கார்த்திகேயன், காவல் ஆய்வாளர்கள், கணேசன், சிவசங்கரி, உள்ளிட்ட காவலர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...