உடுமலை அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் - எஸ்.பி. பங்கேற்பு!

போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, உடுமலை அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.



திருப்பூர்: போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, உடுமலை அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மாவட்டம் எஸ்.பி கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இன்று போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் கலைக்கல்லூரி முதல்வர் கல்யாணி தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது, இன்றைய காலத்தில் போதை பொருள் பழக்கத்தால் பல்வேறு இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். வாழ்வில் முன்னேற்றம் அடையாமல் பல இளைஞர்கள் தடம் மாறி உள்ளனர்.



போதை பொருள் என்னும் பழக்கம் இன்றைய இளம் தலைமுறைகளை அதிகளவு பாதித்தது என்பது குறிப்பிடலாம். ஆகையால் இனி வரும் காலங்களில் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் மற்றும் நண்பர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இறுதியில் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. 



நிகழ்வில் உடுமலை காவல் ஆய்வாளர்கள் ராஜ் கண்ணா மற்றும் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...