உடுமலை அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் - எஸ்.பி. பங்கேற்பு!

போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, உடுமலை அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.



திருப்பூர்: போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, உடுமலை அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மாவட்டம் எஸ்.பி கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இன்று போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் கலைக்கல்லூரி முதல்வர் கல்யாணி தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது, இன்றைய காலத்தில் போதை பொருள் பழக்கத்தால் பல்வேறு இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். வாழ்வில் முன்னேற்றம் அடையாமல் பல இளைஞர்கள் தடம் மாறி உள்ளனர்.



போதை பொருள் என்னும் பழக்கம் இன்றைய இளம் தலைமுறைகளை அதிகளவு பாதித்தது என்பது குறிப்பிடலாம். ஆகையால் இனி வரும் காலங்களில் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் மற்றும் நண்பர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இறுதியில் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. 



நிகழ்வில் உடுமலை காவல் ஆய்வாளர்கள் ராஜ் கண்ணா மற்றும் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....