கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளா பணியிடை நீக்கம்!

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளா தனியார் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்த நிலையில், அவரை தனியார் பேருந்து நிறுவனம் பணியிடை நீக்கம் செய்யதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



கோவை: கோவையின் முதல் பெண் ஓட்டுனர் ஷர்மிளா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளா தனியார் ஓட்டுனராக பணியாற்றி வந்த நிலையில், அவரை தனியார் பேருந்து நிறுவனம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து ஷர்மிளா கூறியதாவது, 







காலையில் கனிமொழி எம்பி என்னை பார்ப்பதற்காக வந்து பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவர் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு தான் பேருந்தில் பயணம் மேற்கொண்டார், இந்நிலையில் பேருந்தில் இருந்த பெண் நடத்துனர் மனம் வருத்தப்படும்படி அவரிடம் பேசினார். அப்போது நான் அவரிடம் இவ்வாறு பேச வேண்டாம் என்று தெரிவித்தேன். 

இது குறித்து எனது முதலாளியிடம் தெரிவிக்கும்போது உனது பாப்புலாரிட்டிக்காக ஒவ்வொருவரையும் அழைத்து வருகிறாய் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. கனிமொழி பேருந்தில் வரும் விஷயமே தங்களுக்கு தெரியாது என்று முதலாளி கூறுகிறார் ஆனால் கனிமொழி வருவது குறித்து நான் ஏற்கனவே அவரிடமும் மேனேஜரிடமும் தெரிவித்திருந்தேன். 

இந்த வாக்குவாதம் நிகழும் போது எனது அப்பாவும் உடன் இருந்தார். அப்போது எனது அப்பா கோபத்தில் நான் பைத்தியக்காரனா என்று வார்த்தை விடவே ஓனர் உனது பிள்ளையை அழைத்துக் கொண்டு போ என்று எனது தந்தையிடம் கூறினார். எனவே நாங்கள் வருகிறோம் என்று கூறிவிட்டு வந்து விட்டோம். 

எப்போதும் எனக்கு ஆதரவாக பேசுபவர் இன்று எனக்கு எதிராக பேசியது மன வருத்தத்தை அளித்தது. வானதி சீனிவாசன் சொல்லாமலேயே வந்தார் ஆனால் கனிமொழி கூறிவிட்டு வந்தார். ஒரு ஓட்டுநரின் நிலைமை இதுதான் என்பதுதான் எனது மனதில் உறுத்தி கொண்டே இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...