கோவை திருச்சி சாலையில் துணிக்கடை உள்ளிட்ட கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

கோவை திருச்சி சாலையில் அடுத்தடுத்து இருந்த துணிக்கடை, கார் உதிரி பாகங்கள் விற்பனையகம் மற்றும் டயர் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.



கோவை திருச்சி சாலையில் சங்கர் என்பவருக்கு சொந்தமான துணிகள் மற்றும் கைத்தறி பொருட்கள் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை சுமார் 10 மணியளவில் கடை திறக்கப்படுவதற்கு முன்பாக கடையில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

5 வாகனங்களில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அக்கடையின் அருகில் இருந்த இண்டோ கார்ஸ் என்ற கார் உதிரிபாகங்கள் விற்பனையகம் மற்றும் சுந்தரம் டயர்ஸ் என்ற டயர்கள் விற்பனை கடையிலும் தீ வேகமாக பரவியது கண்டறியப்பட்டது.

தீயணைப்புத் துறையினர் நடத்திய விசாரணையில் அக்கட்டிட உரிமையாளர் புகழேந்தி, கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீபாவளி விற்பனைபோக மீதமான பட்டாசுகளை அங்கு சேமித்து வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்த சில பட்டாசுகள் வெடித்து சாலையில் வந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த தீவிபத்தில் துணிக்கடையில் வைக்கப்பட்டிருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும், கார் உதிரிபாக விற்பனையகத்தில் இருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. பட்டாசுகள் சேமித்து வைத்திருந்த பகுதியில் ஏற்பட்ட தீயே இந்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தீ விபத்தில் அதிர்ஸ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படாத போதும், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...