அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனரை சஸ்பெண்ட் செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

தனியார் ஆலைகளுக்கு ஆதரவாகவும், ஊழியர்களை ஒருமையில் நடத்தி வரும் உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குனர் சண்முகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கரும்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: உடுமலை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குனரை பணியிடை நீக்கம் செய்யக்கோரி விவசாயிகள் கரும்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 62 ஆண்டுகால பழமையான சர்க்கரை ஆலையாகும். இந்த நிலையில் தற்போது ஆலை மேலாண்மை இயக்குனர் சண்முகநாதன் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் சர்க்கரை ஆலை மிக விரைவில் மூடப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. 



இந்நிலையில், ஊழியர்களை ஒருமையில் நடத்தி வரும் மேலாண் இயக்குனரை பணிநீக்கம் செய்யக்கோரி அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலகம் முன்பு கரும்புகளுடன் விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தில், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து, விவசாயிகள் விளைவித்த கரும்பை முழுமையாக அரவை செய்ய வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்க வேண்டும், பதினைந்து நாட்களுக்குள் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். 



கூடுதலாக கரும்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும். பயிர் கடன் வழங்க வேண்டும். அமராவதி பிரதான கால்வாயில் கரும்பு பயிருக்கான உயிர் தண்ணீர் 21 நாட்களுக்கு விட வேண்டும், ஆலையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது மேலாண்மை இயக்குனரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...