தடாகம் அருகே ஆதரவற்ற முதியவரின் உடலை அடக்கம் செய்த போலீசார்!

கோவை தடாகம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்த நாகேஷ் என்ற 60 வயது முதியவர் நேற்றைய தினம் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த நிலையில், அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், தடாகம் போலீசாரே உடலை அடக்கம் செய்துள்ளனர்.



கோவை: தடாகம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இறந்த ஆதரவற்ற நாகேஷ் என்ற முதியவரின் உடலை தடாகம் காவல்துறையினரே அடக்கம் செய்தனர்.

தர்மபுரி காரியாமங்களத்தைச் சேர்ந்தவர் 60 வயதான நாகேஷ். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக கோவை தடாகம் பகுதியில் வந்து தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நாகேஷ் வயது மூப்பின் காரணமாக இறந்துள்ளார். 

அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது சித்தாப்பா மகன் காளியப்பன் என்பவர் உடலை பெற்றுக் கொள்வதாகவும் ஆனால் அடக்கம் செய்ய பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.



இதையடுத்து தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளார் ஆறுமுக நயினார் மற்றும் காவலர்கள் கார்த்தி, முனியப்பன், பழனிசாமி ஆகியோர் அவர்களது சொந்த பணத்தில் பிரேத பரிசோதனை முடித்து ஜீவசாந்தி அறக்கட்டளை உதவியுடன் அவரது உடலை நல்லடக்கம் செய்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...