பல்லடம் நகராட்சித் தலைவர் மீது நம்பிக்கை இல்லா சூழல் - 7 திமுக உட்பட 10 கவுன்சிலர்கள் போர்க்கொடி!

பல்லடம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 உறுப்பினர்களில் 7 திமுகவினர் உட்பட 10 பேர் தங்களது வார்டுகளுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராமல் புறக்கணிப்பதாகவும், நகராட்சியில் டெண்டர் முறைகேடு நடப்பதாகவும் கூறி நகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதன் காரணமாக பல்லடம் நகராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா சூழல் நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



திருப்பூர்: பல்லடம் நகராட்சியில் முறைகேடு நடப்பதாக கூறி திமுக உட்பட 10 கவுன்சிலர்கள் நகராட்சி தலைவருக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சி தலைவராக கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் நகராட்சி தலைவர் கவிதாமணி என்பவர் பொறுப்பேற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.



இந்நிலையில் பல்லடம் நகராட்சி ஆணையரிடம், திமுக உறுப்பினர்கள் 7 பேர் உட்பட 10 கவுன்சிலர்கள் புகார் மனுவை அளித்துள்ளனர்.



அதில், தங்களது வார்டுகளுக்கு இதுவரை எந்த ஒரு அடிப்படை கட்டமைப்புகளும் செய்யாமல், மக்களிடம் தங்களை மிகுந்த அவமதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும், டெண்டர் முறைகேடு நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பல்லடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கமிஷன் காரணமாக டெண்டர் மாற்றம் செய்ய கவுன்சிலர்களிடம் கவனத்தை மாற்றி கையெழுத்து பெற்றதாகவும் இதனால் கவுன்சிலர்கள் ஏமாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதனால் ஊழல் முறைகேடு நடப்பதாக திமுக கவுன்சிலர்களுக்கு பெருத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் மாதாந்திர சாதாரண கூட்டம் மற்றும் அவசர கூட்டங்கள் என நகர்மன்ற கூட்டத்தை பத்திரிக்கையாளர்கள் பொதுமக்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என்றும் கடந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் இன்றி ரகசியமாக நடந்ததற்கு கண்டனம் தெரிவித்தும் 7 திமுக கவுன்சிலர்கள் மற்றும் 2 பாஜக கவுன்சிலர்கள் 1 காங்கிரஸ் கவுன்சிலர் என மொத்தம் 18 கவுன்சிலர்களில் 10 கவுன்சிலர்கள் ஒருங்கிணைந்து நகராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...