செந்தில்பாலாஜி கைதும்‌, சிகிச்சையும்‌ - அமலாக்கத்துறை வழக்கறிஞர்‌ ரமேஷ்‌ கூறுவது என்ன?

அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞரான ரமேஷ், செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், விசாரணைக்கு ஆஜராகும்‌ சம்மனை பெறவும்‌, விசாரணை ஆவணங்‌களில்‌ கையெழுத்திடவும் மறுத்ததன் காரணமாகவே கைது செய்யும் சூழலுக்கு அமலாக்கத்துறை தள்ளப்பட்டது என தெரிவித்தார்.



சென்னை: விசாரணைக்கு ஆஜராகும்‌ சம்மனை பெறவும்‌, விசாரணை ஆவணங்‌களில்‌ கையெழுத்திடவும்‌ செந்தில்பாலாஜி மறுத்ததாக அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

அமைச்சர்‌ செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர்‌ என்‌.ரமேஷ்‌ செய்தியாளர்களிடம் கூறியதாவது, அமலாக்கத்துறை விசாரணைக்கு அமைச்‌சர்‌ செந்தில்பாலாஜி ஒத்துழைப்பு வழங்கவில்லை. விசாரணைக்கு ஆஜராகும்‌ சம்மனை பெறவும்‌, விசாரணை ஆவணங்‌களில்‌ கையெழுத்திடவும்‌ மறுத்தார்‌.

அதிகாரிகளிடம்‌ ஒத்துழைக்கவில்லை இதனால்‌, செந்தில்பாலாஜியை கைது செய்ய வேண்டிய நிலைக்கு அமலாக்கத்துறை தள்ளப்பட்டது. ஆனால்‌, கைது செய்ய போகிறோம்‌ என்றதும்‌ செந்தில்பாலாஜி அழ ஆரம்பித்துவிட்டார்‌. தரையில்‌ புரண்டு நெஞ்சுவலிப்பதாக கதறினார்‌. எனவே, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அதிகாரிகள்‌ அழைத்‌துச்‌ சென்றனர்‌.

மருத்துவர்கள்‌ பரிசோதனை செய்துவிட்டு, அவரின்‌ உடல்நலம்‌ நல்ல நிலையில்‌ இருக்கிறது. அவர்‌ பயப்படுவதாலும்‌, பதட்டமடைவதாலும்‌ ரத்த அழுத்தம்‌ அதிகமாக உள்ளது என்றனர்‌. ஆனால்‌, இன்று (நேற்று) காலையில்‌ சூழ்நிலை மாறி, செந்தில்பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனைகள்‌ செய்‌யப்படுகிறது. அவருக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்று கூறப்பட்டது. 

இதனால்‌, மத்திய அரசின்‌ இஎஸ்‌ஐ மருத்‌துவமனையில்‌ இருந்து மருத்துவர்கள்‌ குழு வந்து, செந்தில்‌ பாலாஜியை பரிசோதித்தனர்‌. அவர்கள்‌, செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்து வேறுவிதமாக கருத்து தெரிவித்தனர்‌. நீதிபதி மருத்துவமனைக்கு வந்து செந்தில்‌ பாலாஜியிடம்‌ விசாரித்தார்‌. அப்போது செந்தில்பாலாஜி இயல்பாக பேசினார்‌.

அமலாக்கத்துறை அதிகாரிகள்‌ தன்னை துன்புறுத்தியதாக கூறினார்‌. அப்போது நீதிபதி, உங்களை எந்த வழக்கில்‌ கைது செய்துள்ளனர்‌ என்று தெரியுமா?'' என்று கேட்டபோது. அவர்‌, தெரியும்‌. அமலாக்கத்துறை அதிகாரிகள்‌ சம்மன்‌ கொடுத்ததாக கூறினார். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...