கோவை பேரூர் அருகே கஞ்சா விற்ற இளைஞர் கைது - 3 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை பேரூர் அருகே புட்டுவிக்கி சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை பிடித்து தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், அவரிடம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் புலியகுளம் பகுதியை சேர்ந்த நவீன் (25) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த 3 கிலோ அளவிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவை மாவட்டம் பேரூர் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை பேரூர் சாலை புட்டுவிக்கி அருகே தொழிலாளர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, புட்டு விக்கி சாலை கந்தசாமி கவுண்டர் தோட்டம் அருகே சந்தேகத்திற்கு இடமாக இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். 

அப்போது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில், பிடிபட்ட நபர் கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் நவீன் (25) என்பதும், பெயிண்டர் வேலை செய்து வந்த இவர், தொழிலாளர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2023 முதல் தற்போது வரை தனிப்படை போலீசாரால் இதுவரை போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 347 நபர்கள் மீது 260 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 516 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த கண்காணிப்பு வேட்டை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...