கோவை சிங்கநல்லூரில் டாஸ்மாக்கை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

சிங்காநல்லூர் அடுத்த கமலா மில் குட்டை பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவில் அருகேயுள்ள டாஸ்மாக் கடையால் கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள், டாஸ்மாக் கடையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சக்தி விநாயகர் கோவில் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்காநல்லூர் அடுத்த கமலா மில் குட்டை பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த அருகே சுமார் 20 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்துவிட்டு வரும் சிலர் கோவில் வாசலில் படுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

மேலும், கடை மூடினாலும் 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் அவ்வழியாக செல்வதாக கூறி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், இதுதொடர்பாக ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும், உடனடியாக டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...