கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது!

திண்டுக்கல்லை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு திருமணம் செய்துகொள்ள முடியாது எனக்கூறி ஏமாற்ற முயன்ற கோவை பிரஸ் காலனியை சேர்ந்த ஸ்ரீராம் (24) என்ற இளைஞரை போலீசார், போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: கோவையில் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கோவையில் தங்கி மளிகை கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அப்போது இவருக்கும், கோவை பிரஸ் காலனியில் வசித்து வரும் ஸ்ரீராம் (24) என்பவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீராம் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த சில நாட்களுக்கு முன் குன்னூர் அழைத்துச் சென்று தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

பின்னர் மீண்டும் கோவை வந்தவுடன் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என இளைஞர் கூறியுள்ளார். இது தொடர்பாக சிறுமி கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார் ஸ்ரீராமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...