கோவை அருகே அத்திகடவு – பில்லூர் பிரதான குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் - மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள அத்திக்கடவு - பில்லூர் குடிநீர் 1வது திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கோடிக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வரும் நிலையில், உடைப்பை சரிசெய்யும் பணியின் காரணமாக 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது எனவும் அறிவிப்பு.

கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே அத்திக்கடவு - பில்லூர் குடிநீர் 1வது திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. 

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கடந்த 2020ம் ஆண்டு முதல் சுமார் 88 கோடி மதிப்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா முதல் வண்ணாங்கோவில் வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் தினமும் வாகன நெரிசல்கள் அதிகரித்து வருகின்றன. அங்கு ஏற்படும் புழுதியில் தான் மக்கள் தினமும் சென்று வருகின்றனர்.

மேலும் அதே பகுதியில் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அத்திக்கடவு –பில்லூர் குடிநீர் 1வது திட்டத்தில் பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. இன்று மாலை அந்த குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் ஆற்று வெள்ளம் போல பெரியநாயக்கன் பாளையத்தில் பெருக்கெடுத்து ஓடியது.



இதுகுறித்து உடனடியாக குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முக்கிய தண்ணீர் குழாயாக இருப்பதால் உடனடியாக தண்ணீரை நிறுத்த முடியவில்லை. இதன் காரணமாக கோடிகணக்கான லிட்டர் தண்ணீர் வீணானது. இரவு நேரத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் வேலை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வரும் 2 நாட்களுக்கு அத்திகடவு - பில்லூர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் இருக்காது என்று தெரிகிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ, போட்டோ எடுத்து முகநூல், வாட்ஸ் ஆப்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...