கோவையில் 2 புதிய மகளிர் காவல்நிலையங்களை திறந்து வைத்த டிஜிபி சைலேந்திரபாபு!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் வால்பாறை ஆகிய 2 பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்ட 2 புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்களை தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.

கோவை: கோவை மாவட்டத்தில் 2 புதிய அனைத்து மகளிர் காவல் நிலையத்தை காணொலி காட்சி வாயிலாக தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் வால்பாறை பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.



இந்நிலையில், கோரிக்கையை ஏற்று மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி விஜயகுமார்  மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயாணன்  ஆகியோர் பரிந்துரையின் பேரிலும், தமிழக முதல்வர்  உத்தரவின் பேரிலும், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகளில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டது.



இந்த காவல் நிலையங்களை காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக  டிஐஜி விஜயகுமார், மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பத்ரிநாராயணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்நிகழ்வில் கருமத்தம்பட்டி மற்றும் வால்பாறை உட்கோட்ட‌ துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆறு உட்கோட்டங்களிலும் மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...