திருப்பூர் நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் பரிசோதனை மேற்கொண்ட அமைச்சர் சாமிநாதன்!

தமிழகம் முழுவதும் 500 நகர்ப்புற நல வாழ்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிலையில், திருப்பூரில் திறக்கப்பட்ட நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டார்.

திருப்பூர்: திருப்பூரில் உள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் 500 நகர்ப்புற நல வாழ்வு மையத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று துவக்கி வைத்தார்.



திருப்பூர் மாவட்டத்தில் 27 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் இன்று திறக்கப்பட்ட நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் நடைபெற்ற திறப்பு விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வரின் திறப்பு விழா நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பு நகர்ப்புற நல வாழ்வு மையத்தை ஆய்வு மேற்கொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அங்குள்ள மருத்துவரிடம் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தையும் வழங்கினார்.

Newsletter

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...