கோவையில் விதிகளை மீறி பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் அகற்றம்!

கோவை மாநகரில் தனியார் பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் பொருத்தி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறி 12 தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்களை போக்குவரத்து காவல்துறையினர் அகற்றி பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறி 12 தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்களை போக்குவரத்து காவலர்கள் அகற்றி பறிமுதல் செய்தனர். 

கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் “ஏர் ஹாரன்” பொருத்தி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. 

இதையடுத்து மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் மதிவாணன் உத்தரவின் பேரில், கோவை மாநகரம் முழுவதும் போக்குவரத்து காவலர்கள் கண்காணிப்பை தீவிரபடுத்தினர். 

இதில் போக்குவரத்து விதியை மீறி அதிக அளவு ஒலி எழுப்பக்கூடிய “ஏர் ஹாரன்களை” பொருத்திய பேருந்துகளை கண்டறிந்து அந்த பேருந்துகளில் பொருத்தி பொருத்தியுள்ள ஹாரன்களை அகற்றி வருகின்றனர். 



அதன்படி கோவை காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்களுக்கு வந்த தனியார் பேருந்துகளை சோதனை செய்தனர். 



அப்போது, 12 தனியார் பேருந்துகளில் பொருத்திருந்த “ஏர் ஹாரன்களை” அகற்றி பறிமுதல் செய்தனர். ஏற்கனவே இது குறித்து போலீசார் எச்சரித்திருந்த நிலையில் மீண்டும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏர் ஹாரன் பொருத்தி பிடிபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்படும் எனவும் அதனை தொடர்ந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...