வால்பாறை அருகே பைக் மீது டிராக்டர் மோதி விபத்து - தந்தை, மகன் படுகாயம்!

வால்பாறை அருகேயுள்ள உருளிக்கல் எஸ்டேட் அருகே இருசக்கர வாகனத்தின் மீது எஸ்டேட் டிராக்டர் மோதிய விபத்தில், முருகாலி எஸ்டேட் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (42) மற்றும் அவரது மகன் சூரியா (12) ஆகிய இருவரும் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கோவை: வால்பாறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 12 வயது சிறுவன் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அடுத்த முருகாலி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (42). இவர் அதே எஸ்டேட் பகுதியில் தொழிற்சாலையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை பாலமுருகன் அவரது மகன் சூரியா (12) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வால்பாறை நோக்கி சென்றுள்ளனர்.

இருசக்கர வாகனம் உருளிக்கள் எஸ்டேட் அடுத்த பெரியார் நகர் அருகே வந்தபோது, எதிரே வந்த உருளிக்கள் எஸ்டேட் டிராக்டர் இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலமுருகன் மற்றும் அவரது மகன் சூரியா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு, எஸ்டேட் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து பின் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.



இதில், மகன் சூரியவுக்கு தலையில் பலத்த காயமும், கால் முறிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் தந்தை பாலமுருகனுக்கு கால் முறிவும், கை கால்களில் காயமும் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து சேக்கல்முடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...