'ஆர்.எஸ்.எஸ்.ன் தலைவர் குந்தன் சந்திராவத்தை உடனடியாக கைது செய்யவேண்டும்' இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட நிர்வாகக்குழுக்க கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.  கோவை ஜீவா இல்லத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட நிர்வாகக்குழுக்க கூட்டம் தேவராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சுப்பராயன் அவர்கள்  கலந்து கொண்டு தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கிப் பேசினார். கூட்டத்தில் மாநில பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது:

கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய் வழங்கப் படவில்லை. சில கடைகளில் அரிசிக்குப் பதில் கோதுமை வழங்கப் படுகிறது. தமிழக அரசின் இத்தகைய போக்கு படிப்படியாக ரேஷன் விநியோக முறையை ரத்து செய்யும் நிலைக்கு கொண்டு செல்லும். எனவே, இதற்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருந்து போராடவேண்டும்.

கேரள  மாநில முதல்வர்  பினராய் விஜையன் தலையை கொண்டு வருபவருக்கு ஒரு கோடி ரூபாய் தரப்படும் என்று ஆர்.எஸ்.எஸ்.ன் தலைவர் குந்தன் சந்தராவத் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.மத்தியில் பி.ஜெ.பி. ஆளுகிற தைரியத்தில் ஆர்.எஸ்.எஸ்.ன் தலைவர் ஒருமாநிலத்தின் முதல்வர் தலையையே வெட்டிக் கொண்டுவர பகிரங்க அறைகூவல் விடுத்துள்ளார். இந்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன், உடனடியாக குந்தன் சந்திராவத்தை கைது செய்யவேண்டும்.

ஈஷா யோகா மையம் 109 ஏக்கரில் அரசு அனுமதி பெறாமலும், விதிமுறைகளை மீறியும்  கட்டடங்களைக் கட்டி  உள்ளது என்று தமிழக அரசு நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.ஈஷா மையம் அபிவிருத்தி கட்டணம் எதைதையும் காட்டவில்லை என்றும் கூறி உள்ளது.ஈஷா மையம் அபிவிருத்தி கட்டணத்தை கட்டிவிட்டால் அதை அங்கீகரித்து விடுவது என்ற தொணியில் உள்ளது.வனப் பகுதிக்குள் யானை வழித் தடங்களை ஆக்கிரமித்தும், மலைவால் மக்களுடை ய நிலங்களை ஆக்கிரமித்தும் அரசின் பல்வேறு துறைகளின் அனுமதி இன்றி ஈஷாவால் கட்டப் பட்டுள்ள கட்டடங்கள் அனைத்தையும் இடிக்கவேண்டும் ஈஷா ஆக்கிரமித்துள்ள நிலங்கள் அனைத்தையும் அரசு கையாகப் படுத்தவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...